Home » Archives by category » தமிழகம் (Page 251)

ராணிப்பேட்டையில் ரவுடி வெட்டி கொலை

Comments Off on ராணிப்பேட்டையில் ரவுடி வெட்டி கொலை

பானாவரத்தில் ரவுடி சரத்குமாா் (22) கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை – தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட SP தீபா சத்யன் IPS, DSP பிரபு […]

Continue reading …

மெகா தடுப்பூசி மையம்!

Comments Off on மெகா தடுப்பூசி மையம்!

ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாட்டில் நாளை மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபத்தில் […]

Continue reading …

குறை தீர்ப்பு முகாம்!

Comments Off on குறை தீர்ப்பு முகாம்!

இன்று முதல் ரேஷன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குறை நீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், பொதுமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜூலை மாதத்திற்கான முகாம் நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வந்து வாங்க இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. இம்முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், […]

Continue reading …

பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு!

Comments Off on பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 11ம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பானவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் எவ்வித மாறுதலுமின்றி 11ம் தேதி நடைபெறும் என்று […]

Continue reading …

போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

Comments Off on போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

போக்குவரத்துத்துறை நடத்துனர் மற்றும் ஓட்டுனரும் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டுமென போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டும் வருகிறது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக […]

Continue reading …

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு!

Comments Off on தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஐந்து ரூபாய் வரை […]

Continue reading …

செங்கல்பட்டு விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on செங்கல்பட்டு விபத்தில் 5 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மேல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு விரைவு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. […]

Continue reading …

ஓலா நிறுவன பணியாளர்கள் நீக்கமா?

Comments Off on ஓலா நிறுவன பணியாளர்கள் நீக்கமா?

ஓலா நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்கள் 500 பேரை வேலைநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓலாவின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து செலவுகளை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்களின் லிஸ்ட்டையும் கணக்கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓலா நிறுவனம் […]

Continue reading …

கடும் குளிருக்குள் தமிழகமா?

Comments Off on கடும் குளிருக்குள் தமிழகமா?

தமிழகத்தில் கடும் குளிராக இருக்கும் என்று எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என சென்னை வானிலை மையம் விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி […]

Continue reading …

ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

Comments Off on ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் […]

Continue reading …