ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

Filed under: தமிழகம் |

பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசுப் பள்ளிகள் கல்லூரிகளில் 10571 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.