Home » Archives by category » தமிழகம் (Page 264)

உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

Comments Off on உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடுத்த கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்தது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என்று […]

Continue reading …

போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

Comments Off on போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

போலியாக சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 7 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 நபர்கள் திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர். இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை அனைத்தும் போலியென தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை அரசு வாகனங்கைள தவிர மற்ற பிற வாகனங்களில் G, அ எழுத்துகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.   அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது […]

Continue reading …

ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

Comments Off on ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளனர். ஆலையிலிருந்து அதிகமாக வெளிவரும் மாசு காரணமாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள் என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு […]

Continue reading …

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

Comments Off on தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

நாளை மாலை முதல் தூத்துகுடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை முதல் 15ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறினார். இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

Comments Off on பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

பெண்களாக சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடினர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

Continue reading …

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

Comments Off on பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் கோரிக்கைகளை வைத்துள்ளனர் பல சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. இதனையடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் முந்தைய […]

Continue reading …

நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

Comments Off on நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற மே 20, 21-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஊட்டியில் 20-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பாக பல நலத்திட்டங்களை வழங்கும் விழாவிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

Continue reading …

3 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு!

Comments Off on 3 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு!

தமிழகத்தில் விரைவில் 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். இதை தவிர மேலும் சில அறிக்கைகளும் வெளியிட்டுள்ளார். காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயமாக கடைப்பிடிக்கப்படும். திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவில் ஆளுநர்களுக்கு 5% சிறப்பு சம்பளம் வழங்கப்படும். காவலர்களுக்கான நல மேம்பாட்டிற்க்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ரூ.53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் அவர்கள் […]

Continue reading …

மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

Comments Off on மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …