
தமிழக பாஜக தொடங்கிய வேல் யாத்திரை மற்றும் அதன் பின்னணியில் உள்ள இருவர் குறித்து அரசியல் விமர்சனங்கள், கருத்துக்களை தெரிவித்துவரும் விஜயகுமார் அருணகிரி கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- தமிழக பாஜக வேல் யாத்திரையை துவக்கும் முன், தமிழக பாஜக தலைவர் முருகன், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியைசந்தித்து ஆலோசனை நடத்தினார் . கிஷன் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள பாஜகவில் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார். அடுத்து தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் […]
Continue reading …
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியான நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி-யின் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த அறிவிப்பிற்கு, நடிகர் விஜயும், அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று விஜயின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், அரசியல் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும், எஸ்.ஏ.சி கேட்காததால், அவரிடம் விஜய் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.அசோசியேஷன் தொடங்குவதாகவே, என்னிடம் […]
Continue reading …
திருப்பூர் மாவட்டத்தில்,ரூபாய் 31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, விவசாயிகளுடனும் , தொழில்துறை பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசின் நல்ல நடவடிக்கைகளால், வெளிமாநில தொழிலாளர்கள் […]
Continue reading …
நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிக்கு, விஜயே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் எனது ரசிகர்கள் சேரக்கூடாது தடை போட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்ன எஸ் .ஏ.சந்திரசேகர். அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது உங்கள் கட்சிக்கு விஜய் தடை போட்டுள்ளாரே என்பது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் […]
Continue reading …
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் அது பின்வருமாறு :-தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தமிழகத்தில் உள்ளது. நிபுணர் குழு, மருத்துவக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே முடிவெடுக்கப் படுகிறது. பள்ளி திறப்பு தொடர்பான எதிர்க்கட்சி கருத்து பரீசிலிக்கப்படும். கழக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தான். எங்கள் பலம் அனைவருக்கும் தெரியும். கழகம் எக்கு கோட்டை, மோதுபவர்கள் மண்டை தான் உடைபடும். […]
Continue reading …
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அத்துடன் திரையரங்கில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.வரும் 10-ந்தேதி தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.திரையரங்கு வளாகத்திற்குள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட […]
Continue reading …
நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் எம்எம்டிஏ என்று சந்தேகப் படக்கூடிய சாம்பல் வண்ண போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 60 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. ரீப்பர் என்றழைக்கப்படும், மண்டை ஓட்டு முத்திரை கொண்ட இந்த மாத்திரைகளில் 350 மில்லிகிராம் எம்எம்டிஏ இருந்தது. இது மிகவும் அதிக அளவாகும். […]
Continue reading …
அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.செனட் சபையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்து குறைந்த பட்சம் இரண்டு பிரதிநிதிகள் உண்டு.இது தவிர, பிரதிநிதிகள் சபையில் ஒவ்வொரு மாகாணம் சார்ந்தும், இவ்விரு கட்சிகளை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு. [அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட மாகாணம் காலிஃபோர்னியா] குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டு கட்சிகள் சார்பாகவும்,.அமெரிக்க பிரதிநிதிகள் சபை & செனட் சபை இரண்டிலும் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அதிபரை தேர்ந்தெடுக்கும் Electoral college நபர்களை இவ்விரு […]
Continue reading …
வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :- தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கும், அயோத்திதாச பண்டிதருக்கும் முன்பாகவே மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகரின் 123-ஆவது நினைவு நாள் நவம்பர் 3-ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படுகிறது. எளிய மக்களின் நிலவுரிமைக்காக வலியவர்களை எதிர்த்துப் போராடிய ஈடு இணையற்ற போராளியின் நினைவை இந்த நாளில் நாம் போற்றுவோம். செங்கல்பட்டு மாவட்டம் […]
Continue reading …
சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 20 நாட்கள் நடைபெற்ற பட்டாசு விற்பனையை 10 […]
Continue reading …