
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அதிகமாக பரவி உள்ளது. இதனால் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வாரங்களில் நல்ல மாற்றம் ஏற்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்: அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் சலூன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முக […]
Continue reading …
கோவை, ஜூன் 1 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று தமிழக அரசு பொதுமக்களிடம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், ஆகியவற்றில் கூட்டு வழிபாடு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தாலும் தமிழக அரசின் உத்தரவுகளை […]
Continue reading …
கன்னியாகுமரி, ஜூன் 1 கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே உள்ளது திருவரம்பு என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் சதீஸ்குமார், அதேபோல் ராபிமோகன் மற்றும் அவரது அண்ணன் ராபர்ட் நிர்மல்சிங் ஆகியோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் சதிஷ்குமார் நல்ல நெருக்கமாக பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் பிரச்சனை வர அது கோர்ட் கேஷ் என்று பெரிய அளவில் போய் இப்பொழுது பெரிய மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளார் சதிஸ்குமார். நம்மிடம் கண் கலங்கியபடியே பேசிய […]
Continue reading …
சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசால் எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டு முறை, அதிகாரிகள் கூட்டணியால், பாரதிதாசன் பல்கலை.யில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை […]
Continue reading …
65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 65 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு உண்டானது. இந்நிலையில் இப்போது இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் […]
Continue reading …
திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்! திமுகவினர் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பாக இன்று காலை மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ‘ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதும், திமுகவின் மத்திய அமைச்சர் […]
Continue reading …
திருச்சி, மே 30 திருச்சியில் கொரனோ வைரஸ் அச்சத்தில் மக்கள் இருக்க, எந்தவித அச்சமும் இல்லாமல், அரிசி கடத்தல் ஜெகஜோதியாக நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மவுனமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற தகவல் வர விசாரணையில் இறங்கினோம். திருச்சி மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் தனக்கென்று சில புரோக்கர்களை வைத்துக்கொண்டு தினம் தோறும் ரேசன் அரிசியை ரேசன் கடைகளில் நான்கு ரூபாய் கொடுத்து வாங்கி […]
Continue reading …
மருத்துவமனையில் வேலையின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூபாய் 5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேளையில் பணிபுரிந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்ற 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த தகவல் அறிந்த உடன் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாமல் வேலை […]
Continue reading …
நாகை மாவட்டம் நாகூர் ஆஸ்பத்திரி ரோடு மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்ற இளைஞர் மது பிரியர். நேற்று அதிக மது அருந்தியுள்ளார், குடிபோதையில் “குவார்ட்டர் “பாட்டிலை தன் ஆசனவாய் வழியாக உள்ளே விட்டுள்ளார். பாட்டில் முழுமையாக சென்றமையால் வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் துடிதுடித்துள்ளார். உடன் நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்த்து ஸ்கேன் செய்து பார்த்த போது முழு பாட்டில் உள்ளே இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் அதர்ச்சி அடைந்து பக்கிரிசாமிக்கு […]
Continue reading …
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்துள்ள வெட்டுக்கிளிகளின் கூட்டம் எந்த விவசாயப் பயிர்களையும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேரலகிரி கிராமத்தில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளிகளின் கூட்டம் வந்துள்ளது. இதனால் விவசாய பயிர்களை நாசம் செய்துவிடும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் உள்பட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள் வடமாநிலத்தை தாக்கிய […]
Continue reading …