Home » Archives by category » விளையாட்டு (Page 4)

கண்ணீருடன் விலகிய சாக்‌ஷி மாலிக்!

Comments Off on கண்ணீருடன் விலகிய சாக்‌ஷி மாலிக்!

மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகாரளித்தனர். மேலும், பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடைபெற்ற விசாரணையின் இறுதியில், பிரிஜ் பூஷன் சிங் சஸ்பெண்ட் […]

Continue reading …

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

Comments Off on ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடக்கவிருந்த நிலையில் தற்போது கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15, 16 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. எந்த தேதியும் குறிப்பிடாமல் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ‘கார் பந்தயம் […]

Continue reading …

ஓட்ட பந்தய போட்டியில் சிறுவன் பரிதாப பலி!

Comments Off on ஓட்ட பந்தய போட்டியில் சிறுவன் பரிதாப பலி!

14 வயது சிறுவன் ஓட்ட பந்தயத்தில் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாரடைப்புகளுக்கு சரியான உணவு பழக்கம் இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. […]

Continue reading …

பாகிஸ்தான் வீரர்களை வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்!

Comments Off on பாகிஸ்தான் வீரர்களை வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்!

பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார். அதில் “இன்று சங்கடமாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280-ஐ எட்டுவது மிகவும் பெரிய விஷயம். ஈரமான பிட்ச் இல்லை. பாக் வீரர்களின் பீல்டிங், உடற்தகுதி நிலைகளைப் பாருங்கள். கடந்த […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

தற்போது சீன நாட்டில் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 நடந்து வருகிறது. இந்திய வீரர் நிசாத் குமார் தங்கம் இப்போட்டியில், டி47 உயரம் தாண்டுததல் பிரிவில் வென்றுள்ளார். இப்பிரிவில் 2.02 உயரம் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் டி பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் தன் […]

Continue reading …

ஜெய்ஸ்ரீராம் குறித்து வானதி சீனிவாசன்!

Comments Off on ஜெய்ஸ்ரீராம் குறித்து வானதி சீனிவாசன்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிப்பதற்காக மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பில்லை” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என சில ரசிகர்கள் கோஷமிட்டது பெரும் சர்ச்சையானது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிக்க இறைவனை […]

Continue reading …

முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

Comments Off on முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

‘800’ என்ற திரைப்படம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இத்திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் […]

Continue reading …

முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

Comments Off on முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

இன்று நடைபெற்ற டைபிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது.இப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்போடியில் உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. எனவே டைபிரேக்கர் மூலம் […]

Continue reading …

செஸ் உலகக்கோப்பை 2 வது சுற்று டிரா!

Comments Off on செஸ் உலகக்கோப்பை 2 வது சுற்று டிரா!

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் […]

Continue reading …

உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

Comments Off on உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியானது குறித்து சில கணிப்புகளை பகிர்ந்து உள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல […]

Continue reading …