உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

Filed under: உலகம்,விளையாட்டு |

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியானது குறித்து சில கணிப்புகளை பகிர்ந்து உள்ளார்.

இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் தகுதி பெற்றால் அந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அந்த மைதானத்தில் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.