Home » Archives by category » விளையாட்டு (Page 2)

இந்தியா பெற்றது 3வது தங்கம்!

Comments Off on இந்தியா பெற்றது 3வது தங்கம்!

இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் […]

Continue reading …

செஸ் தினத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!

Comments Off on செஸ் தினத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார். தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து […]

Continue reading …

தோனி மற்றும் சாக்ஷி தம்பதியருக்கு 15வது திருமண நாள்!

Comments Off on தோனி மற்றும் சாக்ஷி தம்பதியருக்கு 15வது திருமண நாள்!

  கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார். பின்னர் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது. தோனி […]

Continue reading …

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு!

Comments Off on இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர் மோடியை 20 ஓவர் உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 20 ஓவர் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று காலை நாடு திரும்பினர். டில்லி விமான நிலையத்திற்கு காலை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் […]

Continue reading …

சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

Comments Off on சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர். இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை பிரிந்தார். மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனேயே சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் […]

Continue reading …

கிரிக்கெட் வீரர் கர்நாடகாவில் குளிர்பான நிறுவனத்தில் முதலீடு!

Comments Off on கிரிக்கெட் வீரர் கர்நாடகாவில் குளிர்பான நிறுவனத்தில் முதலீடு!

கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலங்கை அணியின் முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குளிர்பான நிறுவனத்தை தொடங்கவுள்ளார். குளிர்பானம், திண்பண்ட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ முத்தையா முரளிதரன் அங்கு நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய […]

Continue reading …

நடிகர் விஜய்யுடன் தோனி நடிப்பது குறித்து படக்குழுவினர் விளக்கம்!

Comments Off on நடிகர் விஜய்யுடன் தோனி நடிப்பது குறித்து படக்குழுவினர் விளக்கம்!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும் “கோட்” திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக […]

Continue reading …

மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

Comments Off on மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபீகா ராணி, மாற்றுத் திறனாளியான தீபீகா, தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம், “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு […]

Continue reading …

விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்!

Comments Off on விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்!

மார்ச் 22ம் தேதி 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது. சென்னையில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் […]

Continue reading …

கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

Comments Off on கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் […]

Continue reading …