
பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார். பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெறும் WTA 1000 போட்டியோடு முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 சாம்பியனான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மகளிர் டென்னிஸ் சங்கத்தின் (WTA) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து மிர்சா பேசினார். 36 வயதான அவர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுகிறார். […]
Continue reading …
கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டி குடும்பத்தினர் தனது மகனுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது. விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் உடலின் பல […]
Continue reading …
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா “நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா?” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதையடுத்து இப்போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரமீஸ் ராஜா, “பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்றும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறுவதை பார்க்கும் போது நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா? என்றுதான் கேள்வி […]
Continue reading …
முக்கிய வீரர்களின் ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன? என்பதற்கான விபரங்கள் இதோ… அமித் மிஸ்ராவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, லக்னோ அணியும், பியூஷ் சாவ்லாவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, மும்பை அணியும், இங்கிலாந்து வீரர் சாம் கரன் ரூ.18.5. கோடிக்கு ஏலம்.- மேலும் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்னை அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! நியூசிலாந்து வீரர் […]
Continue reading …
குத்துச்சண்டை வீரர் ஒருவர் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. தற்போது அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் தனது எட்டாவது கோலை மெஸ்ஸி பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா அணியின் கொண்டாடி வரும் நிலையில் […]
Continue reading …
பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கூட நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் வெற்றிக்கு முயற்சி கூட செய்யவில்லை என்பதை தான் நான் பொருட்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 169 என்ற இலக்கை வெகு எளிதாக விக்கெட் இழப்பின்றி 16 […]
Continue reading …
செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வு பெறவில்லை என்றும், தன்னால் இன்னும் டென்னிஸ் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார். ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை, அதனால் பல தோல்விகளை அடைந்தார் என்று கூறப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து செரீனா […]
Continue reading …
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி […]
Continue reading …
போலீசார் ஹைதராபாத்தில் கிரிக்கெட் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்றது. இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. 3வது டி-20 போட்டி வரும் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் […]
Continue reading …