Home » Archives by category » Uncategory » புதுச்சேரி (Page 2)

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

Comments Off on சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுமி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறுமியின் கொலை குறித்து அறிந்ததும் நிலைகுலைந்து விட்டதாகவும், […]

Continue reading …

புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம்.

Comments Off on புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம். புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி. இதனால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு

Continue reading …

உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி

Comments Off on உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி

உப்பளம் தொகுதியில் *கொசு மருந்து* தெளிக்கும் பணி திமுக கழக துணை * உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்: *புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உப்பளம் தொகுதி முழுவதும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்* *அனிபால் கென்னடி* அவர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறார், பொதுமக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து காக்க வேண்டும் என்று *நகராட்சி டாக்டர்* *பிரிதா* அவர்களை *சட்ட மன்ற* *உறுப்பினர்* […]

Continue reading …

தமிழிசைக்கு நாராயணசாமி எச்சரிக்கை!

Comments Off on தமிழிசைக்கு நாராயணசாமி எச்சரிக்கை!

காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி புதுச்சேரியில் தமிழிசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோல்வியடைய தீவிர முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் புதுவை தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுவை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் […]

Continue reading …

பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்புமா எதிர்க்கட்சிகள்?

Comments Off on பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்புமா எதிர்க்கட்சிகள்?

பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு முதலாக தொடர்ந்து இரண்டு முறை 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2019ல் இரண்டாவது முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்த பாஜகவின் ஆட்சி காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுகு முன்பாக நாளை மறுநாள் (பிப்ரவரி 1) நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தாண்டின் முதல் மத்திய கூட்டத்தொடரான இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து […]

Continue reading …

பாஜக தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

Comments Off on பாஜக தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

பாஜக மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த […]

Continue reading …

சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய வணிகத்துறை அதிகாரிகள்!

Comments Off on சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய வணிகத்துறை அதிகாரிகள்!

சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி வரி வசிலிப்பில் முறைகேடு செய்த இரு அதிகாரிகள் சிக்கினர். நேற்று மாலை புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வணிகவரி வளாகத்தில் சென்னையிலிருந்து 3 கார்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பெண் அதிகாரி ஒருவரை சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் […]

Continue reading …

ஹேப்பி ஸ்ட்ரீட் குறித்து தமிழிசை சௌந்திரராஜன்

Comments Off on ஹேப்பி ஸ்ட்ரீட் குறித்து தமிழிசை சௌந்திரராஜன்

சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது சமீபத்தில் புதுவையிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றைக்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். பாதுகாப்பு […]

Continue reading …

புதுச்சேரியில் மாஸ்க் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

Comments Off on புதுச்சேரியில் மாஸ்க் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

பொதுமக்கள் மாஸ் அணிய வேண்டும் என்று புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் […]

Continue reading …

புதுச்சேரியில் தீபாவளி பரிசு அறிவிப்பு!

Comments Off on புதுச்சேரியில் தீபாவளி பரிசு அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. அரிசி சர்க்கரைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 490 ரூபாய் பணம் அனுப்பப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரைக்கு பதில் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியிலுள்ள மக்கள் […]

Continue reading …