புதுசை முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியர்கள் தற்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊழியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் இனி அவர்கள் 15000 என ஊதியம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணி துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு தங்களது நன்றியை […]
Continue reading …பரோட்டா சாப்பிட்டு இரவு தூங்கிய இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்களில் விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். சில கடைகளில் சுகாதாரமின்றி சமைப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி (33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் […]
Continue reading …விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் […]
Continue reading …கைதி ஒருவர் பீகார் மாநிலத்தில் சிறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது மொபைல் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்ததால் அந்த போனை அவர் முழுங்கி விட்டதால் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்திலுள்ள கோபல்கஞ்ச் சிறையில் கைதிகள் மத்தியில் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது அடுத்து சிறை உயர் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கைசர் அலி என்ற கைதி மொபைல் போன் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் திடீரென மொபைலை […]
Continue reading …நாளை முதல் 144 அமலில் இருக்கும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை […]
Continue reading …புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு […]
Continue reading …புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பெண்களுக்கான தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை துவக்கி வைத்துள்ளார். பெட்ரோல் போடுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்பதால் பெண்கள் அதிருப்தியடைவார்கள். பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் […]
Continue reading …அமமுக டிடிவி தினகரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதிருந்தே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சிலர் அதிமுகவில் இணைந்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அமமுகவிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதிமுகவிற்கு சிலர் சென்றுள்ளனர். பலர் என்னை […]
Continue reading …ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 24 பேர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். […]
Continue reading …புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக பணத்தை வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதுச்சேரியில் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரை கொடுப்பதற்கு பதிலாக […]
Continue reading …