பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் சாதியை அடையாளமிட்டு காட்டுவதற்காக கட்டப்படும் கயிறுகளுக்கு தடை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டும் மோதல் காரணமாக நெல்லை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்றும், சாதி அடையாள கயிறுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை […]
Continue reading …காத்துவாக்குல ரெண்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஒரு ரவுண்ட் அடித்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இப்படத்தில் நடித்துள்ளனர். வசூலிலிலும் ஓரளவுக்கு திருப்திகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இன்று சற்று முன்னர் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டூடூடூ” பாடலின் வீடியோ வெளியாகியயுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தாராவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் சுனிதி சௌஹான், சஞ்சனா கால்மாஞ்சே […]
Continue reading …600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு […]
Continue reading …சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கோடிக்கணக்கில் காவலர்கள் கிரிப்போடி கரன்சி மோசடியில் இழந்தது தெரியவந்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கையில் கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்துள்ளதால், சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் எனவும், அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை […]
Continue reading …ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி கேரள மாநிலம் காசர்கோட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில […]
Continue reading …இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் இலங்கை மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் […]
Continue reading …டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 10 லட்சம் […]
Continue reading …டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்தனர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் […]
Continue reading …தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]
Continue reading …உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]
Continue reading …