திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.

Filed under: தமிழகம் |

திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி துறை மாநகர் மாவட்ட தலைவர் பிரேம்,தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஜங்ஷன் ராஜீவ்காந்தி உருவசிலை அருகில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ், காங்கிரஸ் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சேவாதள பிரிவு மாநில பொதுச்செயலாளர் அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி மாநில பொதுச் செயலாளர் சரோஜாதேவி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் இளைஞர் காங்கிரஸ் அருண், காசிம் முன்னாள் கோட்டத் தலைவர்கள் ராஜ்மோகன்,ஓவியர் கஸ்பர், ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ரயில்வே சரவணன், சம்சுதீன்,பஞ்சாயத்து ராஜ் பிரிவு அண்ணாதுரை பழனியாண்டி மூக்கன் பழனியப்பன் பிச்சமுத்து கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் தேவதானம் செந்தமிழ் செல்வன் ரங்கநாதன் தமிழ்ச்செல்வன் பழனியப்பன் பழனியாண்டி பொன்னுச்சாமி ஹவுஸ் பாய் ஜாகிர் உசேன் அப்துல் காதர் கிஷோர் வரகனேரி காதர் சபரீஷ் காந்திபுரம் மனோகர் போட்டோ ஆஸ்கர்பாய் நாச்சிகுறிச்சி அருண்பிரசாத் பூக்கடை பன்னீர்செல்வம் அனலை ராஜேந்திரன் மற்றும் பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்