
‘ என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும் . அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்க்கு ஜீவன் கொடுப்பவர். என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் .அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது , எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் . நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன் . அவரை காமெராவில் பார்த்த போது ‘ நாயகன் ‘ நாசரை நினைவு படுத்தினார் .அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும் , கண்ணியமும் , என்னை மிகவும் கவர்ந்து உள்ளது . இதற்கான பெருமையில் அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு . கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலபடுகிறது’ என்று கூறும் போதே அவரது குரலில் பெருமிதம் பொங்குகிறது.