திருச்சி தென்னூரில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா. வட்டார கல்வி அதிகாரிகள் பங்கேற்பு.

Filed under: தமிழகம் |

திருச்சி தென்னூரில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா. வட்டார கல்வி அதிகாரிகள் பங்கேற்பு.

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியின் 91-வது பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி,அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் புரவலர் என்.வி. முரளி மற்றும் முத்துலட்சுமி ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் சிவகுமார், வட்டார வள மைய மேற்பார்மையாளர் மல்லிகா பெரியநாயகி, குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர் கண்ணம்மாள், ரத்னா மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் அனந்தபத்மநாபன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி நிறைவு பெற்ற ஆசிரியை உஷாராணி க்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை என்.வி முரளி, எம்.ராமநாதன் ஆகியோர் வழங்கினர். வரும் கல்வி ஆண்டில் புதிதாக சேர உள்ள மாணவர்களுக்கு ரோஜா மாலை அணிவித்து வட்டார கல்வி அலுவலர்கள் வரவேற்றனர்
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாடகம் போன்றவற்றை திரளான பெற்றோர்கள் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.நிறைவாக ஆசிரியர் உமா நன்றி கூறினார்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் ஆசிரியர்கள் சரண்யா, உமா, சகாயராணி, மேரி செரோபியா, ஜெயந்தி, பப்பிஸ்டா ஆகியோர் செய்திருந்தனர்.