திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

Filed under: தமிழகம் |

திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அன்னதானம் வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி உள்ள மாவட்ட அலுவலகத்தில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மனோகரன், நிர்வாகிகள் கருமண்டபம் நடராஜன், செங்கல் மணி, , ஈஸ்வரன், பால்ராஜ்,தொழிற்சங்கம் ரவி, மகளிர் அணி கலா, பத்மாவதி, பாத்திமா, தாயார் சீனிவாசன், சுதாகர், கார்த்திகேயன், இளநீர் ராஜேந்திரன், கணேசன், சந்துரு, பிரதீபன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து பல இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்று மாலையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.