நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

Filed under: தமிழகம் |

நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதையானது நீருக்கடியில் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை நாட்டிலேயே முதன்மையானது. இது ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. இதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில்கள் ஹூக்ளி ஆற்றை 32 மீட்டர் ஆழத்திலும், ஆற்றின் கீழ் சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு 45 வினாடிகளில் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம், எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ்-ஹேமந்தா, முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, மற்றும் தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவு. ஆகியவற்றையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்தப் பிரிவு நிலையங்கள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற மற்றும் வசதியான போக்குவரத்துச் சேவைகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.