Home » Posts tagged with » america (Page 5)

அமெரிக்காவில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

கோவையைச் சேர்ந்த தம்பதியர் அமெரிக்காவில் வசிக்கும் மகன்களை பார்க்க சென்ற போது அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த நாகராஜன் (53), இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் கோவையில் செட்டிலாகிவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி; இந்த தம்பதியர்க்கு, ஹதீஸ் (24)ம், தினேஷ் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இரு மகன்களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற நாகராஜன் மற்றும்- விஜயலட்சுமி தம்பதியர், அரிசோனா […]

Continue reading …

நியூயார்க் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுகிறதா சீனா?

Comments Off on நியூயார்க் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுகிறதா சீனா?

சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் […]

Continue reading …

ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு!

Comments Off on ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு!

நேற்று அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்த்தது என்பதும் அதற்கு பதிலடியாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின்போது பின்லேடன் கொல்லப்பட்டார் என்பது மக்கள் அறிந்ததே. தற்போது புதிய அல்கொய்தா தலைவர் அய்மன் அல் […]

Continue reading …

200 ஆண்டு பழமையான ஓவியம்!

Comments Off on 200 ஆண்டு பழமையான ஓவியம்!

அமெரிக்காவில் தஞ்சையின் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் புராதன பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணாமல்போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக […]

Continue reading …

ஹைபர் சோனிக் ஏவுகணை!

Comments Off on ஹைபர் சோனிக் ஏவுகணை!

ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனையிட்டது அமெரிக்கா. அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவில் நடக்கிறது. விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் முன்னிலையில் உள்ள நாடு அமெரிக்கா. தற்போதுஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும். இவ்வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

துப்பாக்கிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

Comments Off on துப்பாக்கிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 18 மாணவர்கள் 1 ஆசிரியர் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க துப்பாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் […]

Continue reading …

அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

Comments Off on அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி அமேரிக்காவில் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. அதில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வளற தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையில் உள்ளது. ஆனால், ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு […]

Continue reading …

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

Comments Off on குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 25: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பின், குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நேற்று நடந்தது. அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் […]

Continue reading …

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

Comments Off on அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன், செப் 24: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்துப் பேசினார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். பின் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை அவர் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், இருதரப்பு […]

Continue reading …

விமானத்தில் நேரத்தை வீணாக்காத பிரதமர் மோடி

Comments Off on விமானத்தில் நேரத்தை வீணாக்காத பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 23: அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, நேரத்தை வீணடிக்காமல், அரசு கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்திடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில், நம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, தலைநகர் டெல்லியில் இருந்து விவிஐபிக்களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம், நேற்று காலை புறப்பட்டார். விமானத்தில் பயணித்த பிரதமர், […]

Continue reading …