உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா குறித்த தரவுகளை பகிறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் பீதியடைந்துள்ளது. சீனா பயணிகளுக்கு உலக நாடுகள் பலவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் சீனாவிலோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உலக நாடுகளை […]
Continue reading …ஜப்பான் அரசு சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப்படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது […]
Continue reading …வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]
Continue reading …இந்தியன் ரயில்வே சீன எல்லை வரை வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் ரயில்வே அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சீன எல்லை வரை ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்டை நாடான பூடான் வரை ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கு எல்லையான அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் புதிய ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன எல்லையை […]
Continue reading …சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் திபேத் துறவி போல தங்கி ஏமாற்றியதால் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு டில்லியிலுள்ள மஞ்சு கா டிலா என்ற பகுதியில் திபேத் அகதிகள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு டோல்மா லாமா என்ற பெயரில் திபேத்திய துறவியாக பெண் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் திபேத்திய துறவி இல்லை என்று தெரியவந்துள்ளது. நேபாள குடியுரிமை குறித்த சோதனையை மேற்கொண்டபோது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து இந்தியாவில் தங்கியிருப்பது […]
Continue reading …இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது பல நாடுகளுக்கும் தெரிந்த விஷயமே. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன. இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் […]
Continue reading …சீன விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீபகாலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தியான்வென் – 1 என்ற விண்கலத்தை அனுப்பிய சீன விண்வெளி ஆய்வு மையம் அதன் மூலம் […]
Continue reading …சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் […]
Continue reading …சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என்று அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதியன்று சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர இருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு […]
Continue reading …சீனா 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து தைவான் கடல்பகுதியில் வீசியுள்ளதால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதால் தைவானில் கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் தைவான் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து போர் பயிற்சி செய்வதாக கூறி வரும் சீனா, தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடலில் தொடர்ந்து பதற்றம் […]
Continue reading …