லாரி டிரைவர் ஒருவருக்கு விபத்தில் சிக்கியபோது தலையில் தையல் போட்ட மருத்துவர் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து சிகிச்சையளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து […]
இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டில்லியில், உள்ள சர்கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, கங்காராம் மருத்துவர்கள், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் கங்கா ராம் […]
Continue reading …சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]
Continue reading …4 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோட்டை சேர்ந்த சிறுமியை அவரது தாயாரும், தாயாரின் காதலனும் சேர்ந்து கட்டாயப்படுத்தி கருமுட்டைகளை மருத்துவமனைகளுக்கு விற்ற விவகாரம்.சிறுமியை தாயாரின் காதலன் வன்கொடுமை செய்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயார், தாயாரின் காதலன், கருமுட்டை விற்ற ஏஜெண்ட் பெண் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக சிறப்பு குழு அமைத்து […]
Continue reading …முதலமைச்சர் தமிழகம் முழுதும் 256 நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். இன்று முதலமைச்சர் மு.க-.ஸ்டாலின் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற திட்டத்தின் கீழ் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை தொடங்கி வைத்தார். தொலைதூர கிராமங்களுக்கான மருத்துவத்தை வலுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 133 மருத்துவ வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக இன்று 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி […]
Continue reading …மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக […]
Continue reading …தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை விழுப்புரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்பு அவரை சென்னைக்கு மாற்றினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான தகவலை அறிந்த அவர், நலம் விசாரிப்பதற்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் குறைந்ததால், அவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் […]
Continue reading …நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் இரு மருத்துவர்கள், திருவெண்காடு பல் மருத்துவர் ஒருவர் மற்றும் பெண் மருத்துவர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் கொரோனாவால் […]
Continue reading …