Home » Posts tagged with » Netrikkan (Page 106)

தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

Comments Off on தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் […]

Continue reading …

மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

Comments Off on மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் […]

Continue reading …

மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

Comments Off on மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் […]

Continue reading …

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

Comments Off on ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

திடீரென நேற்றிரவு சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். டுவிட்டர் உள்ளிட்ட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென ஏன் முடங்கியது. சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி […]

Continue reading …

விஜய்யின் படத்தில் பாடல் கங்கை அமரன் எழுதியுள்ளாரா?

Comments Off on விஜய்யின் படத்தில் பாடல் கங்கை அமரன் எழுதியுள்ளாரா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது ஜிலீமீ நிக்ஷீமீணீtமீst ளியீ கிறீறீ ஜிவீனீமீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு படம் குறித்து பேசும்போது, “இந்த மாத இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி […]

Continue reading …

சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் எப்போது?

Comments Off on சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் எப்போது?

“மதுர வீரன்” என்ற திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது. இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட “படை தலைவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு […]

Continue reading …

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை!

Comments Off on நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை!

பிரதமர் மோடி இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இச்சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பள்ளி […]

Continue reading …

விஸ்வரூபம் எடுக்கும் சிறுமி கொலை வழக்கு!

Comments Off on விஸ்வரூபம் எடுக்கும் சிறுமி கொலை வழக்கு!

பல்வேறு கட்சித் தலைவர்களும் புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட […]

Continue reading …

24வது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on 24வது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் காவல் 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் […]

Continue reading …

புதுவை சிறுமி கொலை குறித்து கமல்ஹாசன்!

Comments Off on புதுவை சிறுமி கொலை குறித்து கமல்ஹாசன்!

கமல்ஹாசன் புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த […]

Continue reading …