
“மிஷன் 1” திரைப்படத்தில் அருண் விஜய் கடந்தண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது. பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் ரிலீசானது. “கேப்டன் மில்லர்” மற்றும் “அயலான்” ஆகிய படங்களுக்கு நடுவே ரிலீசானாலும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க […]
Continue reading …
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ஒன்றிணைகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி […]
Continue reading …
பரந்தூர் பகுதி விவசாய பெருமக்கள் ஓராண்டுக்கும் மேலாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அது குறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் மற்றும் அதன் விளைநிலங்களையும் சேர்த்து சுமார் 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. சமீபத்தில் […]
Continue reading …
நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போகும் தொகுதி குறித்தும் அறிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பலரும் புதிய கட்சிகளும் தொடங்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அரசியலில் களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனியாக இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது […]
Continue reading …
நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி குறித்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வெளியானது. அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே தனது வாதத்தை முன்வைத்துவிட்டார். இன்று இவ்வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடர உள்ளதாகவும் […]
Continue reading …
ப்ளூசட்டை மாறன் தியேட்டர்களில் ரிலீசாகும் திரைப்படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து பிரபலமானவர். இவர் கடந்த 2021ம் ஆண்டு “ஆண்ட்டி இந்தியன்” என்ற படத்தை எழுதி, இயக்கினார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியானது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது சுமாரான வசூலையே பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் சிறிய பட்ஜெட் படம் என்பதால் மற்ற வழிகளில் லாபம் பார்த்துவிட்டதாக […]
Continue reading …
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறமையில் புகழ்பெற்றவர். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர். தற்போது அவரது இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்ஷன்-பேக் படமாக அமைந்து வெளியாக உள்ளது. இப்படம் (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கௌதம் […]
Continue reading …
தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய […]
Continue reading …
ஊடகங்கள் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக இருப்பது குறித்து கருத்துக்கணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் தற்போது பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. தற்போது இரண்டாவது இடத்தை அதிமுக பறி கொடுக்கும் என்ற […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் […]
Continue reading …