
“இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தை அமீர் இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இப்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் திமுகவிலும் அயலக அணியில் பொறுப்பில் இருந்துள்ளார். ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து காஃபி ஷாப் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த இயக்குனர் அமீர் மீது இது சம்மந்தமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் விளக்க அறிக்கையையும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இப்போது […]
Continue reading …
நடிகர் பிரஷாந்த் வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். 90களில் தமிழ் சினிமாவில் முன்னியாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பிரஷாந்த் நடித்த “ஜீன்ஸ்,” “செம்பருத்தி,” “மஜ்னு” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. ஆனால் அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது. கம் பேக் கொடுக்கும் வகையில் இந்தியில் “ஆயுஷ்மான் குரானா” நடித்து ஹிட் அடித்த அந்தாதுன் படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் […]
Continue reading …
ஈவு இருக்கமின்றி கண்மூடித்தனமாக தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலியர்கள் […]
Continue reading …
இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “அச்சமின்றி தேர்வு எழுதுங்கள். இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் திடீரென கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி […]
Continue reading …
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி […]
Continue reading …
இன்று அரசு பள்ளிகளில் 2024 – 25 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளை சேர்க்க பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நேரடியாகவும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் நேரடியாக […]
Continue reading …
சமூக வலைதளங்களில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின் போது அடித்து விட்டதாக நடிகை ஒருவர் பேட்டி அளித்ததாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதற்கு அந்த நடிகை தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். மமீதா பைஜூ ‘வணங்கான்’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின்போது அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. தற்போது நடிகை மமீதா […]
Continue reading …
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் தொகுதியில் பிரபலங்கள் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று 50 பேர்கள் வரை விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் அமைச்சர் கே என் […]
Continue reading …
இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா […]
Continue reading …