Home » Posts tagged with » Netrikkan (Page 171)

செல்வப்பெருந்தகையின் கோரிக்கை!

Comments Off on செல்வப்பெருந்தகையின் கோரிக்கை!

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை சென்னை மட்டுமல்லாது வெள்ளப்பெருக்கால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்காள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், மாவட்டங்கள் மிகக்கடுமையாகப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், […]

Continue reading …

சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். சென்னை முழுவதுமாக மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவி […]

Continue reading …

சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் அனுமதி!

Comments Off on சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் அனுமதி!

ஆளுநர் சிறைக்கைதிகள் விவகாரத்தில் 31 கோப்புகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் 71 கோப்புகளில் 31 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு விடுதலை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 39 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு […]

Continue reading …

பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல தடை!

Comments Off on பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல தடை!

பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உகருவாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ம் தேதி வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி […]

Continue reading …

சீனாவில் நிமோனியா பாதிப்பு தீவிரம்!

Comments Off on சீனாவில் நிமோனியா பாதிப்பு தீவிரம்!

நாளுக்கு நாள் சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் குழந்தைகள் அதிகளவு அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் ஆட்டிப்படைத்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் சீன அரசு இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாணவர்கள் ஆன்லைனில் தான் பாடங்களை படித்து வருகின்றனர். நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை […]

Continue reading …

விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Comments Off on விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் நிறைவு!

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படுவதில் தாமதமான நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கி ஷூட்டிங் நடந்தது. இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி […]

Continue reading …

நடைபாதையில் கிடந்த ஒரு மாத குழந்தை!

Comments Off on நடைபாதையில் கிடந்த ஒரு மாத குழந்தை!

காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் சிவகங்கை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் வகையில் அபாயத்துடன் காக்க வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி கட்டிட தொழிலாளி. இவருக்கு சிநேகா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் தலைபிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. […]

Continue reading …

திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்!

Comments Off on திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்!

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் “லியோ” திரைப்படம் குறித்து இவர் பேசியபோது திரிஷாவை பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தது. லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு […]

Continue reading …

குடிமகன் செய்த அலப்பறைகள்!

Comments Off on குடிமகன் செய்த அலப்பறைகள்!

நாளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார். மேலும் அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவினை இழந்து கீழே விழுந்து […]

Continue reading …

வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Comments Off on வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் 5ம் தேதி கடக்கும் என்று […]

Continue reading …