Home » Posts tagged with » Netrikkan (Page 176)

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

Comments Off on மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். அதற்கு “மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்” என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் […]

Continue reading …

துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங்!

Comments Off on துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங்!

தற்போது அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வருகிறது. அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி […]

Continue reading …

டிஜிபி மீதான வழக்கிற்கு அதிமுக கண்டனம்!

Comments Off on டிஜிபி மீதான வழக்கிற்கு அதிமுக கண்டனம்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக போலி செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் […]

Continue reading …

பிரபல இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த ராஜேஸ்குமார்!

Comments Off on பிரபல இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த ராஜேஸ்குமார்!

ராஜேஸ்குமார் தமிழ் எழுத்துலகின் மூத்த படைப்பாளி. இவர், 50 ஆண்டுகளாக தமிழ் எழுத்தாளராக இயங்கி வருகிறார். பல படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இவரது முதல் நூல் வாடகைக்கு ஒரு உயிர் 1980ல் வெளியானது. இவரது முதல் டெஸ்ட் டியூப் கல்கண்டு இதழில் வெளியானது. இதுவரை 1500க்கும் அதிகமான நாவல்கள் எழுதியுள்ளார். இவரது நாவல்கள் சினிமாகவும், தொலைக்காட்சி தொடராகவும் வெளியாகியுள்ளன. ராஜேஸ்குமாரை 80களில் தொடர்பு கொண்ட அப்போதைய முன்னணி இயக்குனர் கே.பாக்யராஜ், கோவையை விட்டு சென்னைக்கு வாங்க, உங்களுக்கு […]

Continue reading …

சூர்யா குணமடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

Comments Off on சூர்யா குணமடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சென்னையில் இப்பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், […]

Continue reading …

தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

Comments Off on தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

எக்ஸ் பக்கத்தில் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு “திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது. சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள். அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன்” என்று விளக்கமளித்தார். இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் […]

Continue reading …

இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

Comments Off on இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது […]

Continue reading …

ஆவின் பால் விலை குறித்து அண்ணாமலை ஆவேசம்!

Comments Off on ஆவின் பால் விலை குறித்து அண்ணாமலை ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பால்வளத்துறை இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணாமலை, “ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. தமிழ்நாடு அரசியலில் […]

Continue reading …

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

Comments Off on ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திர மாநில அமைச்சர் டிசம்பர் மாதம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடு முழுதும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை […]

Continue reading …

டைம் டிராவல் கதையில் விஜய்!

Comments Off on டைம் டிராவல் கதையில் விஜய்!

“லியோ” திரைப்படம் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் ரிலீசாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தையடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். “தளபதி 68” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. […]

Continue reading …