
கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி தாலூக்கா விஜய நகரில் கோலார் பகுதியில் வசித்து வந்த பவித்ரா அங்குள்ள உர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த குருபிரசாத் என்பவருடன் நட்பு பின்பு காதலானது. குருபிரசாத் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அதை மறைத்து பவித்ராவை காதலித்து வந்துள்ளார். குருபிரசாத்தின் திருமண விவகாரம் தெரிய வந்தது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடி தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பல வழிகளில் […]
Continue reading …
அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை […]
Continue reading …
பூ வியாபாரம் செய்தவர் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ். நகர் 4வது வீதியில் வசிப்பவர் மணிகண்டனின் (36) மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2வது மனைவி ஆவார். இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா நேற்று அவரது […]
Continue reading …
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. “ஜெயிலர்” திரைப்படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது. […]
Continue reading …
ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் மும்மைப ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தின் நின்று இரண்டு சிறுவர்கள் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் சிறுவர்கள் கைகளைக் கழுவியபடி இருந்தனர். அதில் ஒரு சிறுவன் கைகளைக் கழுவிட்டு தண்ணீர் குடித்த பின், இன்னொரு சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்தார். உடனே ரயில் அருகில் வரும் சத்தம் கேட்டு, ஓரமாக ஒதுங்கிவிட்டார். ஆனால், […]
Continue reading …
இன்று 4வது நாளாக பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாண்டர் புற நகரில் உள்ள ஒரு பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக இளைஞர் நீல் (17வயது) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார், இதனால் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் […]
Continue reading …
மத்திய அரசு ஏற்கனவே பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இன்றுடன் பான் கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை […]
Continue reading …
நேற்றிரவு ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில், “கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு […]
Continue reading …
நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]
Continue reading …