Home » Posts tagged with » Netrikkan (Page 242)

மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

Comments Off on மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.சூரியசக்தி மின் வேலிகள் உள்பட அனைத்து மின் வேலிகள் அமைப்பதற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதனை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் வேலிகள் அமைப்பு என்பது காப்பு காடுகளிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி […]

Continue reading …

இந்தியாவின் டாப்லிஸ்ட்டில் சென்னை ஐஐடி முதலிடம்!

Comments Off on இந்தியாவின் டாப்லிஸ்ட்டில் சென்னை ஐஐடி முதலிடம்!

சென்னை ஐஐடி இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இப்பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. 72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 62.74 புள்ளிகளுடன் 15ம் இடத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 17ம் இடத்தில் […]

Continue reading …

தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

Comments Off on தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன என கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரை தப்பிக்க வைத்து விட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? 22 கிலோ கஞ்சாவை காவல் நிலைய காவல்துறையினர் […]

Continue reading …

மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “மாமன்னன்” திரைப்படம் “ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மாமன்னன்” திரைப்படம் ஓடுனா என்ன? ஓடலைன்னா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகிறது? அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டது, கொரனாவை சிறப்பாக எதிர்கொண்டது, ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது. […]

Continue reading …

சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு?

Comments Off on சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு?

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு செய்து வருகிறது. சில அலுவலகங்களில் விடிய விடிய 17 முதல் 20 மணி நேரம் வரை ரெய்டு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடந்ததாகவும் கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய தகவல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 17 மணி நேரத்துக்கு மேலாக […]

Continue reading …

ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

Comments Off on ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்தில் 31வது தென்மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக […]

Continue reading …

கோவையில் சோகம்!

Comments Off on கோவையில் சோகம்!

பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் என்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் […]

Continue reading …

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு 6ம் தேதி தீர்ப்பு!

Comments Off on அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு 6ம் தேதி தீர்ப்பு!

சிறப்பு நீதிமன்றம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 6ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த 1996&-2001ம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவனம் தயாரித்து மாமியார் பெயரில் பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் […]

Continue reading …

கஞ்சாவை தின்ற எலிகளால் இருவர் விடுதலை!

Comments Off on கஞ்சாவை தின்ற எலிகளால் இருவர் விடுதலை!

எலிகள் சாப்பிட்ட 11 கிலோ கஞ்சாவால், அதை கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்கள் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டது. மீதி 11 கிலோ கஞ்சா மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வழக்கில் குற்றம் காட்டப்பட்ட இருவரையும் விடுதலை […]

Continue reading …

நாளை தனுஷ் 50 படத்தின் பூஜை?

Comments Off on நாளை தனுஷ் 50 படத்தின் பூஜை?

நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்தார். அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். திரைப்படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படம் முடிந்துள்ளதையடுத்து இந்த படத்தை தனுஷ் […]

Continue reading …