Home » Posts tagged with » Netrikkan (Page 271)

தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க டெண்டர் வெளியிட்ட ஆவின்!

Comments Off on தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க டெண்டர் வெளியிட்ட ஆவின்!

ஆவின் நிறுவனம் தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த டெண்டர் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்வளத்துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆவின் நிறுவனத்தின் மூலம் மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். பெட் பாட்டில்கள் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் […]

Continue reading …

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நாளை முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற இருந்தது. ஆனால் இந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியருக்கான இடம் ஆறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த பொது பணியிட மாறுதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி […]

Continue reading …

மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Comments Off on மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சிலர் மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகம் மாவட்டத்தின் புதிய டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Continue reading …

விமானப்படையின் திடீர் முடிவு!

Comments Off on விமானப்படையின் திடீர் முடிவு!

இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டு வரும் மிக் 21 ரக போர் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒன்று மிக் 21 ரக போர் விமானங்கள். சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மிக்21 ரக போர் விமானங்கள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இந்த மிக் 21 […]

Continue reading …

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ராஷ்மிகா பதில்!

Comments Off on ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ராஷ்மிகா பதில்!

ஐஸ்வர்யா ராஜேஷ் “புஷ்பா” திரைப்படம் குறித்து சர்ச்சையான கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா பதிலளித்துள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா.” படத்தில் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மூலம் அவர் பல மொழிகளிலும் பிரபலமானார். சமீபத்தில் புஷ்பா படம் பற்றியும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் குறித்தும் ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “சமீபத்தில் ஒரு பேட்டியில் […]

Continue reading …

மெக்சிகோவில் மகளிர் அமைப்புகள்!

Comments Off on மெக்சிகோவில் மகளிர் அமைப்புகள்!

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் நிஹல்கொயாட் பகுதியை சேர்ந்த 23 வயதான ரொக்ஸ்னா ருயிஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரொக்ஸ்னாவுக்கு பழக்கமாகியுள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தனது வீட்டிற்கு செல்ல […]

Continue reading …

கவர்னரை சந்தித்து மனு அளித்த அண்ணாமலை!

Comments Off on கவர்னரை சந்தித்து மனு அளித்த அண்ணாமலை!

கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த […]

Continue reading …

2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

Comments Off on 2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கி இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் […]

Continue reading …

11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சி!

Comments Off on 11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சி!

இன்று மாலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Continue reading …

10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Comments Off on 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பனின் மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வியடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]

Continue reading …