
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஜோடியாக இணைந்து நடித்தனர். இந்த இருவரின் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதையடுத்து கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தங்களது முதலாவது திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு “உன்னை நேசிக்கும் உணர்வு ஒருபோதும் […]
Continue reading …
நடிகை ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கை கன்னட சினிமாவில்தான் ஆரம்பம் ஆனது. பன்மொழிப் படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ரசிகர்கள் செல்லமாக அவரை “நேஷனல் க்ரஷ்” என்று அழைகின்றனர். இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, உட்பட நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அண்மையில் ஒரு புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் […]
Continue reading …
இன்று ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், […]
Continue reading …
பாஜக தமிழகத்தில் வரும் 20ம் தேதி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் வேட்டை தமிழகம் முழுதும் காவல்துறை நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ம் தேதி பேரணி நடத்தி […]
Continue reading …
அமேசான் காட்டிற்குள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டிற்குள் ஏற்பட்ட இந்த விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 17 நாட்களுக்குப் பின் இன்று ஒரு 4 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது அமேசான் காடு. உலகில் நுரையீரல் என்று அழைக்கப்படும் இது மழைக்காடு. இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி, […]
Continue reading …
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்திலுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க […]
Continue reading …
வீட்டிலேயே கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளார் பெண் ஒருவர். இதை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிரழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான கள்ள சாராயம் காய்ச்சும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரணி அருகே வடுகசாத்து என்ற கிராமத்தில் வீட்டிற்குள் கேஸ் அடுப்பு […]
Continue reading …
ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் கலெக்டர் பதவி கிடைத்துள்ளது. இந்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்றைய மாவட்ட கலெக்டர் இடமாற்றம் குறித்து அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளான விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும் சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்து கொண்டனர். நேற்று நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் விஷ்ணு மற்றும் ஆஷா ஆகிய கணவன் மனைவி இருவருமே பக்கத்து பக்கத்து மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் விஷ்ணு நகராட்சி நிர்வாகத்துறையிலும் […]
Continue reading …
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை குமரன் சாலை பகுதியில் வசித்து வரும் செல்வி முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீன் வியாபாரி ஒருவர் தன்னைத் தாக்கியதாகக் கூறி, காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இன்று காலை குமரன் சாலையில் அமைந்துள்ள 150 அடி […]
Continue reading …