Home » Posts tagged with » Netrikkan (Page 320)

செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்!

Comments Off on செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்!

சென்னையில் மூவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. வாடகை பாக்கியால் செல்போன் டவரை எடைக்கு போட்டு காசாக்கியுள்ளனர் வீட்டின் உரிமையாளர்கள். சென்னை கோயம்பேடு வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்கள் மூவருக்கும் சொந்தமான பில்டிங்கின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் சார்பில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கென மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் நிறுவனம் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

Comments Off on சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

“மண்டேலா” படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய […]

Continue reading …

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!

Comments Off on அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையில் மோதல் எழுந்த நிலையில் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை நீக்குவதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிப்பது எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்கினர். இது சம்மந்தமாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என […]

Continue reading …

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பற்றி கருத்து!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பற்றி கருத்து!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் “நாம் தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறோம்” என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாண்டு இந்தியாவுக்கு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருது என்பது உலகளவில் மதிப்பிற்குரிய ஒரு விருதாக கருதப்படுகிறது. இந்த விருதை பெற்றவர்கள் அதை விற்க முடியாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் பற்றிய சலசலப்பு இந்தியாவில் அதிகமாக எழுந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்கள் எதுவும் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. இதுபற்றி ஆஸ்கர் விருது பெற்றவரான […]

Continue reading …

நயினார் நாகேந்திரன் கருத்து!

Comments Off on நயினார் நாகேந்திரன் கருத்து!

பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன்” என்று தெரிவித்திருந்தார். பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் பொதுச்செயலாளருக்கான தேர்தலை அறிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சத்திரன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம், “அதிமுகவின் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் திடீரென்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஏற்கனவே, நீதிமன்றத்தில் புகார்கள் இருக்கும்போது, தேர்தல் நடத்தலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தற்போது, அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் […]

Continue reading …

“துருவ நட்சத்திரம்” படம் பற்றிய அப்டேட்!

Comments Off on “துருவ நட்சத்திரம்” படம் பற்றிய அப்டேட்!

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 6 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடக்கிறது. படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு!

திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் சமீபத்தில் மறைவடைந்த நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள். சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு ஓபிஎஸ் இடம் ஆறுதல் தெரிவிக்க […]

Continue reading …

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம்!

Comments Off on சென்னையில் திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதியில் இருக்கும் பத்மாவதி தாயார் கோவிலைப் போல் சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டி இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானவர் திரண்டனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. ரூபாய் 10 […]

Continue reading …

மாணவி கழுத்தறுத்துக் கொலை; இளைஞர் கைது!

Comments Off on மாணவி கழுத்தறுத்துக் கொலை; இளைஞர் கைது!

காதல் பிரச்னையால் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவரது, மகள் தரணி (19 வயது). அங்குள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார். தரணி தன் வீட்டிலிருந்த தோட்டத்த்ல் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் தரணியைப் பிடித்து, அவரது கழுத்தறுத்துவிட்டு, தப்பியோடிவிட்டார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் தோட்டத்திற்குச் சென்று […]

Continue reading …