
சென்னை கல்லூரி மாணவி பாலியல் தரகர் வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரகாஷ் என்பவரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது […]
Continue reading …
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள “அகிலன்” திரைப்படம் பிளாப் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் “பூலோகம்.” இப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இப் படத்துக்கு “அகிலன்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் […]
Continue reading …
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி வரும் நிலையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இதற்குச் சுமூகத் தீர்வுகாண வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் தனது டுவிட்டரில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று […]
Continue reading …
தற்போது டில்லியில் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நான்கு நாட்களாக எம்பிக்கள் அமளியால் எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை. லண்டனில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம், “இந்தியாவுக்கு எதிராக […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று முதல் வரும் 19ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் மார்ச் 20ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் […]
Continue reading …
நடிகர் வடிவேலு “சந்திரமுகி” ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்ததால் இயக்குனரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காமெடி நடிகரான வடிவேலு மீது அடுக்கடுக்கான தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமாக உள்ளது. அவர் படப்பிடிப்புக்கும் சரியாக வராததாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுக்காதது என தொடர்ந்து இயக்குனர், மற்றும் தயாரிப்பளர்களுக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேலு “சந்திரமுகி 2” திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்ததும் தன்னுடைய காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி.வாசுவை […]
Continue reading …
பரோட்டா சாப்பிட்டு இரவு தூங்கிய இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்களில் விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். சில கடைகளில் சுகாதாரமின்றி சமைப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி (33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் […]
Continue reading …
வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தின் புதிதாக ஒருங்கிணைப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னை வரப் போவதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள […]
Continue reading …
பக்தர்கள் பேஸ் ரெககனைஷேசன் மூலம் திருப்பதியில் தங்குவதற்கும் அறை வாடகைக்கு எடுப்பதற்கும் சோதனை செய்யப்படுவார்கள். அறையை வாடகைக்கு எடுத்தவரே தான் காலி செய்ய வேண்டும். அப்போதுதான் டெபாசிட் பணம் திரும்ப தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதையடுத்து அதை தவிர்ப்பதற்காக இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களிலும் பேஸ் […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம் காரணமாக தொடர்ந்து 3வது நாளாக முடங்கியுள்ளது. அதானி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் மீண்டும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதாக தெரிகிறது. ஒரு பக்கம் பாஜக ராகுல் காந்தி மீது உரிமை […]
Continue reading …