
தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கிளம்பும் என்றும் நெல்லைக்கு மறுநாள் காலை 9 மணிக்கு சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருப்போர் தனது சொந்த ஊருக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பரும் அவதிக்குள்ளாகினர். பொங்கல் பண்டிகையின் விடுமுறைக்காக அவரவர் தனது சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருப்பதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி மக்கள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். இன்று மக்கள் தங்கள் […]
Continue reading …
பாஜக எம்.பி. சுவாமி விவேகானந்தரின் மறுபிறவிதான் பிரதமர் மோடி என பேசியுள்ளார். நேற்று விவேகானந்தரின் 160 வது தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்பி சௌமித் கான் பேசிய போது, “பிரதமர் மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர், தனது தாயாரை இழந்த போதும் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக தனது அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி என்று எனக்கு […]
Continue reading …
நடிகை குஷ்பு அரசு செய்யும் தவறை தட்டி கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருக்கின்றார் என்று கூறியுள்ளார். நடிகை குஷ்பு கன்னியாகுமாரியில் விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “ஒரு அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் அரசாங்கத்தின் செயல்களை மேற்பார்வை செய்யவும் தான் கவர்னர் இருக்கிறார். அவ்வகையில் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பவராக நம்முடைய கவர்னர் இருக்கிறார். சட்டசபையிலிருந்து கவர்னர் வெளியே போகும்போது அமைச்சர் பொன்முடி […]
Continue reading …
பாஜகவிலிருந்து சமீபத்தில் காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து மேலும் ஒரு பிரபலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணாமலை அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர் ஆரூர் ரவி என்பவருக்கும் புதிய தலைவர் அருள் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து […]
Continue reading …
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக அரசு தயாரித்த கவர்னர் உரையை கவர்னர் படிக்கவில்லை என்றும் கவர்னர் ஒரு சில வார்த்தைகளை விட்டுவிட்டார் என்றும் சில வார்த்தைகளை இணைத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு அரசு தயாரித்த உரையை கவர்னர் படிப்பதுதான் மாண்பு என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே திமுகவினரின் வாதமாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் […]
Continue reading …
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் சென்னையில் உள்ள வங்கியில் திடீர் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். வங்கித்தேர்வு பொங்கல் அன்று நடைபெற உள்ளதால் அத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உயர் அதிகாரிகள் அழைத்தனார். இந்த பேச்சு வார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்காததால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததாகவும் சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் […]
Continue reading …
ஜனவரி 31ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி நடத்தப்பட்டு அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் 67 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் கூட்டத்தொடரில் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள […]
Continue reading …
அதிரடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை கட்சிகள் சார்பில் ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் […]
Continue reading …