Home » Posts tagged with » Netrikkan (Page 359)

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

Comments Off on அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

பாஜக தமிழ்நாட்டின் தலைவராக கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார். தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனங்களும் தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவிலுள்ள அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இசட் பாதுகாப்பு பிரிவில் 33 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் […]

Continue reading …

அமைச்சர் சக்கரபாணி தகவல்!

Comments Off on அமைச்சர் சக்கரபாணி தகவல்!

ரேசனில் விரைவில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொங்கலை முன்னிட்டு ரேசன் கடைகளில் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Continue reading …

தாலிபான்கள் உத்தரவு!

Comments Off on தாலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே பெண்களுக்கு பல உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் அரசு அலுவலர்களில் வேலை செய்யக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது, பெண்கள் கல்லூரியில் படிக்கக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் […]

Continue reading …

கவர்னர் நாளை டில்லி பயணம்!

Comments Off on கவர்னர் நாளை டில்லி பயணம்!

நாளை தமிழக கவர்னர் ரவி டில்லி பயணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டில்லிக்கு கவர்னர் ரவி […]

Continue reading …

விஜய் டயலாக்கை டிரெண்டாக்கிய பாஜக!

Comments Off on விஜய் டயலாக்கை டிரெண்டாக்கிய பாஜக!

பாஜகவினர் “வாரிசு” திரைப்படத்தில் விஜய் பேசும் வசனத்தை திமுகவிற்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டேகாக டிரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில காலமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையை முழுவதுமாக படிக்காமல் சில வார்த்தைகளை நீக்கியதும், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுனர் பாதியிலேயே சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஆளுனரை திமுக நடத்திய விதம் குறித்து […]

Continue reading …

மொபைல் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ!

Comments Off on மொபைல் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ!

தைவான் நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் போன் சார்ஜர் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் டாவோயுவான் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய நிலையில், இந்த விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் செல்போன் சார்ஜர் திடீரென்று வெடித்தது. இதைப் பார்த்து அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். […]

Continue reading …

மோடி திறந்துவைக்கும் சொகுசு கப்பல்!

Comments Off on மோடி திறந்துவைக்கும் சொகுசு கப்பல்!

நாளை பிரதமர் மோடி உலகின் மிக நீளமான ஆற்றுச் சொகுசு கப்பலை திறந்துவைக்க உள்ளார். பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. மக்களுக்கு பல திட்டங்கள், அறிவிப்புகள் இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி நாளை (ஜனவரி 13) தொடங்கி வைக்கவுள்ளார். இந்த சொகுசு கப்பல் நாளை வாரணாசியில் இருந்து ஆரம்பித்து […]

Continue reading …

சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை!

Comments Off on சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை!

கொரோனா நோயாளிகள் சீனாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு […]

Continue reading …

மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!

Comments Off on மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!

மெட்ரோ ரயில் பணிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்து சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அசோக் நகர் என்ற பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனை கவனித்த அதிகாரிகள் அதை சுற்றி வேலியமைத்து விபத்து ஏற்படாத வகையில் தடுத்தனர். பள்ளம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்து […]

Continue reading …

ஹரியானாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Comments Off on ஹரியானாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இளம்பெண் ஒருவர் வேலை பார்த்த இடத்தில் மேலாளரிடம் சம்பள உயர்வு கேட்டு சென்ற போது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகுராம் பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் 30 வயது இளம்பெண் ஒருவர் பணி செய்து கொண்டிருந்த நிலையில் தனது சம்பளம் விவகாரம் தொடர்பாக மேலாளர் அழைத்ததின் பெயரில் அவரது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு போதை மருந்து கொடுத்த மேலாளர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]

Continue reading …