
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் கோயம்பேடு முதல் மாதம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதை அமைக்க ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சென்னை மெட்ரோ […]
Continue reading …
அடையார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்படப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்செய்தியை அடையார் பகுதியிலுள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்றான அடையார் பணிமனையில் வணிக வளாகம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்படப் போவதாக வெளியாகி உள்ள தகவல் […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் அஜீத் மற்றும் விஜய் நடித்துள்ள படங்கள் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். முன்னணி நடிகர்களான அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது. இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் “வாரிசு”ம் அஜீத்தின் “துணிவு”ம் பொங்கலில் ரிலீசாகவுள்ளன. அஜீத் ரசிகர்களின் சார்பில், நெல்லையில் […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துணை முதலமைச்சருக்கு நிகராக உதயநிதி செயல்படுகிறார்- என்று பாராட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது. ஓராண்டிற்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி கடந்த 14ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்றார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறிய நிலையில் தன் […]
Continue reading …
தங்கள் அம்மன் வழிபாட்டினை செவ்வென முடித்த பக்தர்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்க்கு இன்று வந்தனர். மனமுருகி நாகூர் ஆண்டவரை வழிபட்ட பக்தர்களுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்று பிரார்த்தனைக்கு உதவியது. அனைவருக்கும் உகந்தவரான நாகூர் ஆண்டகை வாசலுக்கு இந்த புனித கந்தூரி மாதத்தில் வருகை புரிந்த பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தோம். கோயிலில் பூஜை முடிந்ததும் பக்தர்கள் சற்று நேரம் வெளி திண்னையில் அமர்வதுபோல தர்கா மினாரா கீழ் பக்தர்கள் அமர்ந்த விதம் கண் கொள்ளா […]
Continue reading …
சமீபத்தில் கவுதம் மேனன் ஒரு டௌண்ட் டேபிள் நிகழ்ச்சியில் தன்னை லவ் டுடே திரைப்படத்தில் கேலி செய்ததைப் பற்றி பேசியுள்ளார். “லவ் டுடே” திரைப்படம் இவ்வாண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்தது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய் வரை திரையரங்குகள் மூலமாக வசூல் செய்தது. இதனால் படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் […]
Continue reading …
ஆப்கானில் உள்ள பெண்களின் உயர்கல்வி மற்றும், என் ஜி ஓக்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ள தாலிபான்களின் உத்தவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில். ஆப்கானிஸ்தானில் கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர். பழமைவாதிகளாக தாலிபான்கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் 6ம் […]
Continue reading …
லைகா நிறுவனம் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகளை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக செய்து வருகிறது. எப்போதும் அஜீத் திரைப்படங்களுக்கு பெரியளவில் புரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இம்முறை “துணிவு” திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் புரமோஷன்களை செய்கிறது. வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம். துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் “துணிவு” திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல […]
Continue reading …
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்தத்தை வைத்து ஓவியம் வரையும் முறையை தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தங்களது அன்பானவர்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து தருவது, டாட்டூ குத்திக் கொள்வது என பல வழிகளில் பலரும் தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துகின்றனர். அதில் தற்போது ஆபத்தான முறையில் ப்ளட் ஆர்ட் என்னும் முறை டிரெண்டாகி உள்ளது. இதில் தங்களது ரத்தத்தை எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களின் ஓவியத்தை அந்த ரத்தத்தாலேயே வரைந்து பரிசாக அளிக்கின்றனர். இதுபோன்ற Blood Art வரைந்து தருவதற்கான […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வந்தனர். இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …