
இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பத்றகும் நியூசிலாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புகை இல்லா நாடாக மாற்ற நியூசிலாந்து நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025ம் ஆண்டுக்குள் புகைபிடிப்பில்லாத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …
இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உதவி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரண்டு மடங்காக உயர்ப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். “திமுக இளைஞர் அணியின் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் பதவியேற்றபோது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து கொண்டுதான் […]
Continue reading …
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இன்று நீதிமன்ற ஆணையை அமல்படுத்தவில்லை என ஊழியர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருமலை -திருப்பதி தேவஸ்தான […]
Continue reading …
நடிகர் சந்தானம் “தமிழ்நாட்டின் கனவு கனவாக வாழ்த்துகள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரான உதயநிதி, இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டுமடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில், […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கன்னியாகுமரியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் 105 ரூபாய் ஊதியத்தில் பள்ளிக்கல்வித்துறை துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து லட்சுமணனுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை […]
Continue reading …
ஆளுங்கட்சியான திமுகவை “முடிசூட்டு விழா’’…. இதுதான் திராவிட மாடலின் சாதனை? – என விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையிலான 3 பிரிவாகப் பிரிந்துள்ளது. அவ்வப்போது, சசிகலா அறிக்கைகளை வெளியிட்டும், ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்தும் வருகிறார். இன்று உதயநிதி எம்.எல்.ஏ. அமைச்சராகப் பதவியேற்கிறார். இதுகுறித்து சசிகலா ஓரறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அவர்களை நம்பவைத்து, ஆட்சிக்கட்டியில் அமர்ந்து […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர். சமீபத்தில் இயக்குனர் சக்திவேல் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Continue reading …
நடிகர் சரத்குமார் பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னையில் போராட்டத்தில், “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் […]
Continue reading …
தமிழக அரசு 2023ம் ஆண்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் […]
Continue reading …