
வருமான வரித்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரிபாக்கியில் 20% மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் அதை முன்னாள் அமைச்சர் செலுத்தவில்லை என்றும் அதனால் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் மூடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. விஜயபாஸ்கர் 206 கோடி வரிக்காக 117 ஏக்கர் நிலம் 4 வங்கி கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை […]
Continue reading …
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் இந்த முறை அந்த ஒரு தொகுதியை கூட விடாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை ஏற்ற முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்து விட்டோம். ஆனால் இம்முறை 40 தொகுதிகளிலும் […]
Continue reading …
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான “டிமான்டி காலனி” கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது “டிமான்ட்டி காலனி 2” படத்தை அஜய் ஞானமுத்து உதவியாளர் ஒருவர் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயக்குனர் மாற்றப்பட்டுள்ளது. “டிமான்ட்டி காலனி” திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட […]
Continue reading …
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு சமூக வலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் முறைகேடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குறித்த அறிக்கையை அளித்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி மூன்று லட்சத்து இருபத்தி நான்காயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கணக்கூகள் விதிமுறைகளை மீறி செயல் பட்டதன் காரணமாகவும், ஒரு சில கணக்குகள் […]
Continue reading …
நடிகர் பிரபாசை நடிகை கிருத்தி சனோன் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் எனக்கே தெரியாமல் பலர் என்னுடைய திருமணத்தை நிச்சயித்து வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அனைத்தும் வதந்தி என்று நடிகை கிருத்தி சனோன் விளக்கமளித்துள்ளார். பாகுபலி திரைப்படம் மூலமாக பிரபலமான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து “ஆதிபுருஷ்” என்ற […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டரில், இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணியாளர் போட்டித் தேர்வும், தமிழக பல்கலைக்கழகத் தேர்வும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் […]
Continue reading …
கணவர் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர் மகேஷ் சந்திராவின் மனைவி ஷாலு தேவி. இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் ஷாலு தேவி தனது சகோதரர் ஒருவருடன் பைக்கில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதில் பலியானார். இந்த வழக்கை விபத்து என போலீஸ் முடிக்க இருந்த நிலையில் ஷாலுவின் கணவர் மகேஷ் சந்திரா மீது சந்தேகம் […]
Continue reading …
தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை பணி புரிய வைத்து விட்டு டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியே சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஆய்வின்போது டாஸ்மாக் பணியாளர்கள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆய்வின்போது ஊழியர்கள் கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பதிலாக வேறு நபர்கள் பணியாற்றுவதாக வந்த புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட […]
Continue reading …