
நடிகர் பார்த்திபனை “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளதை பாராட்டு ரசிகர் ஒருவர் பாராட்டியதை தொடர்ந்து அதற்கு ரீ-டுவிட்டில் “அற்ப மாயை தான் புகழ்ச்சி என்றாலும், வளர்ச்சிக்கு உதவுமே” என்று பதிவிட்டுள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்குபின் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது […]
Continue reading …
தனுஷ் நடிப்பில். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ராக்கி.” இப்படம், வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேர்ஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் திரைப்படம் தீபாவளி முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் “மாவீரன்” திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகுமென கூறப்படுகிறது. “டாக்டர்” மற்றும் “டான்” படங்களின் வெற்றிக்குப்பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் […]
Continue reading …
ஓபிஎஸ் முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் தனிமையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் முதல்வரைச் சந்தித்ததை பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎச், ஈபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூடிய சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் […]
Continue reading …
புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. தற்போது அது குறித்து அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை கடுமையாக்கி புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500 அபராதமாகவும், இரண்டாவது முறை ரூ.1500 அபராதமாகவும் வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் […]
Continue reading …
இன்று சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்க நாட்டிலுள்ள ஓகியோ மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல கார் விற்பனை மையம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரியெட்டா என்ற நகரில் அமைந்துள்ள கார் விற்பனை மையத்தின் மீது விழுந்தது. இதில், அங்கிருந்த கார்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Continue reading …
மனைவி டிவி, பிரிட்ஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்து கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியான மாநிலத்தின் குருகிராம் பகுதியை சேர்ந் 22 வயதான ராகுல், பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சம்பளம் தினசரி செலவுகளுக்கே போதாத […]
Continue reading …
சென்னை மெட்ரோ நிறுவனம் இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் நேரங்களில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணத்தில் நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படுவது போல் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பீக் நேரத்தில் மட்டும் ஐந்து நிமிடம் இடைவேளை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 4 மணி முதல் இரவு 11 […]
Continue reading …
கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வரும் பத்ரி சேஷாத்ரி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவரை இணையக்கல்வி ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையானது. இவர் தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி […]
Continue reading …