
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் […]
Continue reading …
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்பவர் கல்லூரி மாணவி சத்யா என்பரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்”- என பதிவிட்டுள்ளார். சதீஷ் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. ஐஎம்டி எச்சரிக்கையின் படி, அக்டோபர் 20ம் தேதி வரை கேரள மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், […]
Continue reading …
பள்ளிக்கல்வித் துறை இனிமேல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளிலும் அரசு பணிகளுக்கும், மருத்துவ படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வந்தனர். சமீபத்தில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]
Continue reading …
இன்று ஒரு நாள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு […]
Continue reading …
சென்னை ஐகோர்ட் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை பற்றிய முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து […]
Continue reading …
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது என கூறியுள்ளார். இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே இளைஞர்கள் சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் […]
Continue reading …
செவிலியர்கள் 2 இளைஞர்கள் மருத்துவமனையைப் புகைப்படம் எடுத்த காரணத்தினால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இது அறியப்படும் நிலையில் இங்குள்ள சுகாதாரம், மருத்துவவசதிகள் உள்ளிட்டவை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மருத்துவமனையில் […]
Continue reading …
சசிகலா எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் தற்போது நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என நான்கு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முழுமுயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும்? எப்போது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த […]
Continue reading …
ஆறுமுகசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று […]
Continue reading …