
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் முதாட்டி பாப்பாயி (90)யின் மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லை கொடுத்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டி பாப்பாயி வீட்டில் படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார். இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, கிருஷ்ணன் மீது […]
Continue reading …
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்ததையடுத்து குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிய அந்த நபர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுத்து அதன் பின் விஷமருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த கணவன் […]
Continue reading …
இன்று முதல் குலசேகரன்பட்டிணத்தில் தசரா திருவிழா தொடங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தசரா திருவிழா கொண்டாடப்படவில்லை. இவ்வாண்டு இம்மாதம் தசரா திருவிழா விமர்சையாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இன்று தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் […]
Continue reading …
இனி பாட்டிலில் பெட்ரோல் தரப்படமாட்டாது என தமிழகத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீடுகள், வாகனங்கள் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடி கைது செய்து வருகிறது. இச்சம்பவங்களால் தமிழகம் முழுதும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு […]
Continue reading …
“ராம் சேது” திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையேவுள்ள “ராம் சேது” என்ற பாலம் ராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் நிலையில் அதை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் இந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நவீன காலத்தில் எடுக்கப்பட்ட கதையம்சம் போல் உள்ளது. அக்ஷய்குமார் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் […]
Continue reading …
நாளை நாசா விண்வெளி ஆய்வு மையம் பூமி அருகே வரும் விண்கல் ஒன்றின் மீது நாசாவின் விண்கலம் மோதும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. […]
Continue reading …
என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையில் போலீஸ்காரங்களே குறுக்க வராதீங்க என பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் பேசியுள்ளோம். பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் […]
Continue reading …
ஜேம்ஸ்வெப் வெப் தொலைநோக்கி எடுத்துள்ள நெப்டியூனின் புகைப்படங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் உள்ள பிற பால்வெளி அண்டங்கள், பெரிய நட்சத்திரங்கள், நெபுலா உள்ளிட்டவற்றை ஆராய ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. விண்வெளி சென்ற ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் இதுவரை மனித இனம் காணாத பல கேலக்சிகளையும், கோள்கள், நெபுலா உள்ளிட்டவற்றையும் படம் பிடித்து அனுப்பியது. தற்போது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி சூரிய குடும்பத்தை சேர்ந்த நெப்டியூனை படம் பிடித்துள்ளது. நெப்டியூனை […]
Continue reading …
பல திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் உலகின் முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால் உலகின் பல பகுதிகளிலும் திடீரென இன்ஸ்டாகிராம் முடங்கிப் போனதால் பயனர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11.45 மணிக்கு திடீரென இன்ஸ்டாகிராம் முடங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் இன்ஸ்டாகிராம் சேவை கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு என்ன காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற […]
Continue reading …இயக்குனர் கேமரூன் “அவதார் 2” கதையை குப்பை தொட்டியில் வீசியதாக கூறியுள்ளார். 2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலகளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலாத சாதனையை இத்திரைப்படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி “அவதார் 2” வெளியாக உள்ள […]
Continue reading …