
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு வயது 75 ஆகும். […]
Continue reading …
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளிலிருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு, அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். வரும் செம்ப்டம்பர் 30 முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம் இதோ, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்பட்டு, வந்தவாசி, எஞ்ச்சி மார்க்கமாகச் செல்லும் […]
Continue reading …
சௌந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் கடவுள் கொடுத்த பரிசுதான் “வீர் பாப்பா” என்ற தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடியதை ரஜினிகாந்த் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடவுள் தனக்கு இந்த பிறந்தநாளின்போது அளித்த பரிசுதான் வீர் பாப்பா என்று கூறினார். மேலும் கடவுளின் […]
Continue reading …
மிக வேகமாக புதுவையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுவையில் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை புதுவையில் 747 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் […]
Continue reading …
பிரதமர் மோடி பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவியபோது பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை அறிவித்தார். பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் […]
Continue reading …
அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ளார். ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தை இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், “‘ஹலால்’ என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும். அதனால்தான் அந்த வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. ஹலால் என்ற வார்த்தை அச்சிடும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து தொடர்கிறது” என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், முன்னதாக ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தையை அச்சிடப்பட்டு இருந்ததால் அதை […]
Continue reading …
பெண் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகாரளித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது பெண் எழுத்தாளர் ஜூன் கரோலி என்பவர் அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் மன்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு கடையில் உடை மாற்றும் அறையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியபோது, “டிரம்ப் மீது வழக்கு தொடர […]
Continue reading …
2026ம் ஆண்டு இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை கூறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் சேர்ந்தவர்கள்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதிகமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழிலதிபர்கள் அதிகம் இருப்பதால் லட்சாதிபதிகள் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு 8 லட்சம் லட்சாதிபதிகள் இருந்த நிலையில் 2026ம் ஆண்டு அது 16 லட்சம் […]
Continue reading …
பிரபல இயக்குனர்களோடு மீண்டும் படத் தயாரிப்பது தொடர்பாக ஏவிஎம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்தி வைத்திருந்தது.தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டி வந்தது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் […]
Continue reading …
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. அதிமுக குறித்த வழக்குகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இன்று திடீரென அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி, “உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை […]
Continue reading …