
நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை […]
Continue reading …
கல்லூரி விடுதியில் மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர் அலோக்குமார் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாமல் […]
Continue reading …
ஸ்ரீமதியின் தாயார் 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதியின் தாயார், ‘ரகசிய வாக்குமூலம் கொடுத்த இரண்டு மாணவிகள் உண்மையில் ஸ்ரீமதி தோழிகளா என்பதை நாங்கள் அறிய […]
Continue reading …
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு […]
Continue reading …
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் சிபிஐ சோதனை நடந்துள்ளது. கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. மேலும் டில்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்த சோதனையையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக […]
Continue reading …
மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெறுகிறது. இதன்படி, திருவிழா உற்சவத்தின் விசேஷ பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் மாலையை ஏலத்தில் எடுப்பதற்காக பலரும் முன்வந்துள்ளனர். […]
Continue reading …
திமுக அரசை குறை கூறியும், புதுச்சேரி அரசை பாராட்டியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி, “குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி […]
Continue reading …
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “குருவி,” சூர்யாவின் “ஆதவன்” உட்பட பல படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த “விக்ரம்“ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூல் குவித்ததையடுத்து, கமல் மற்றும்- ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்தைத் […]
Continue reading …
தாய்லாந்தில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் போராட்டம் பெரிய அளவில் இலங்கையில் நடந்ததையடுத்து இலங்கையிலிருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்த அவர் தற்போது தாய்லாந்துக்கு தஞ்சம் புகுந்துள்ளார். தாய்லாந்து அரசு கோத்தபாய ராஜபக்சவை தற்காலிகமாக தங்க அனுமதித்துள்ளது என்றும், அதிகபட்சமாக 90 நாட்கள் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
Continue reading …
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்திருந்தார். மேலும் இயக்குனர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். “விக்ரம் வேதா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என […]
Continue reading …