
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி என்று கூறினார். சமீபத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனைசெய்யப்பட்டுள்ளதாகவும்,2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155உயர்த்த பரிசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்காட்சிகள் […]
Continue reading …
நீலகிரி மாவட்டத்தில் மானத்திற்கு பயந்து வீட்டில் பிரசவம் பார்க்க முயன்றதால் தாய், சேய் ஆகிய இருவரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நிமினிவயல் பகுதியை சேர்ந்த தேவனுக்கு 21 வயதுள்ள மகள் பிரியா அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்ட நிலையில் பிரியா கர்ப்பமாகியுள்ளார். இது பிரியாவின் வீட்டினருக்கு தெரியாமல் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரியாவுக்கு திடீரென வயிற்று வலி […]
Continue reading …
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் “ஓரு நாள் கூரை மேல் இருந்து சேவல் கூவும்! அப்போது அதிகாரம் கைக்கு வரும்!” என்று சீமான் பேசியுள்ளார். இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை இந்திய […]
Continue reading …
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகிக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, கொஞ்சம்கூட யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் ஒற்றை தலைமை பிரச்சனையை கிளப்பி, அனைத்துவிதமான பிளான்களையும் இவர்களே தவிடுபொடியாக்கிவிட்டனர் என்ற சலசலப்புகள் அதிமுகவுக்குள் இன்னும் அதிகமாகவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களுக்குள் எழுந்துள்ளது. அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை […]
Continue reading …
ஓசியிலே டிக்கெட் கொடுத்தாலும் படம் பார்க்க யாரும் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பால்வுட் திரைப்படங்களின் நிலை. சமீபத்தில் இந்தியில் வெளியாகும் படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலேயே சோடைபோகாமல் இருப்பது பாலிவுட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரியளவில் வசூல் மற்றும் புகழை பெறுபவையாக கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் படங்களே இருந்து வந்தன. முக்கியமாக பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாரூக்கான், ஆமிர் கான், சல்மான் கான் ஆகியோருக்கு […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பற்றிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், […]
Continue reading …
சுமார் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த “கோப்ரா” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிபப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. பின் தயாரிப்பு மற்றும் பிற பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ […]
Continue reading …
அமெரிக்கா சென்றுள்ள உலகநாயகன் கமலஹாசன் அங்கிருந்து தான் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்“ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு திரைப்படமும் வசூலிக்காத தொகையை “விக்ரம்” வசூலித்து கமல்ஹாசனை மீண்டும் நம்பர் 1 நடிகராக்கியுள்ளது. இதையடுத்து அவரின் “இந்தியன் 2” படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் தொடங்கபடவுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசன் தற்போது […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு மழை பெய்ததை தொடர்ந்து இன்றும் மழை பொழியும் என தகவல் அளித்துள்ளது. நேற்றிரவு திடீரென சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்ததையடுத்து இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி அதன் […]
Continue reading …
தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் […]
Continue reading …