Home » Posts tagged with » Netrikkan (Page 473)

திரையரங்கில் ரூ.99 மட்டுமே கட்டணம்!

Comments Off on திரையரங்கில் ரூ.99 மட்டுமே கட்டணம்!

ரூபாய் 99 மட்டுமே சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திரையரங்குகளில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த கட்டணம் வாரத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே. ஒவ்வொரு புதன்கிழமையும் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. […]

Continue reading …

கரூரில் போதையில் மாணவிகள்!

Comments Off on கரூரில் போதையில் மாணவிகள்!

மது அருந்திய நிலையில் பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி நிலையில் கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11ம் வகுப்பு படிக்கின்ற கரூரைச் சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் […]

Continue reading …

டில்லியில் முகக்கவசம் கட்டாயம்!

Comments Off on டில்லியில் முகக்கவசம் கட்டாயம்!

தலைநகர் டில்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயமென அரசு உத்தரவிட்டள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 44,203,754 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 526,826 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,535,610 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. டில்லி உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500அபராதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி […]

Continue reading …

கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!

Comments Off on கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!
கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!

திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்னச்ச நல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான நித்யாவின் கணவர் வெற்றிச் செல்வன். அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் பல ஆண்டுகள் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார். நேற்றும் வெற்றிச்செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சென்றுள்ளார் குணசேகரன். அப்போது, மதுபோதையில் இருந்த […]

Continue reading …

3 நாட்கள் விடுமுறையுடன் பிரியாணி!

Comments Off on 3 நாட்கள் விடுமுறையுடன் பிரியாணி!

டிஜிபி சைலேந்திர பாபு ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்தும், 3 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகமாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி முடிவடைந்தது. இதற்கான பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல […]

Continue reading …

பால் பாக்கெட் விலை உயர்வு..!?

Comments Off on பால் பாக்கெட் விலை உயர்வு..!?

தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்த […]

Continue reading …

நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

Comments Off on நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி […]

Continue reading …

ப்ளாப் ஆனதா “லால் சிங் சத்தா?”

Comments Off on ப்ளாப் ஆனதா “லால் சிங் சத்தா?”

இந்தி நடிகர் அமிர் கான் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “பாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இப்படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். இன்று திரைப்படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை […]

Continue reading …

4 நாட்களுக்கு மழை!

Comments Off on 4 நாட்களுக்கு மழை!

வானிலை மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான […]

Continue reading …

வீரமரணமடைந்த தமிழக வீரர்!

Comments Off on வீரமரணமடைந்த தமிழக வீரர்!

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்று காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடத்த துப்பாக்கிசூட்டில் மரணமடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹாலில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர். அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் […]

Continue reading …