
ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பனையாகி உள்ளது. இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வருவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை […]
Continue reading …
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது. டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023ம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. […]
Continue reading …
பிரபலமான சிவன் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பறக்கவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா ஆகஸ்டு 15ம் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆந்திராவில் உள்ள பிரபலமான சிவன் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தேசியக்கொடி […]
Continue reading …
நேற்று பெரும்பாலான ஊடகங்களில் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், “வணிக நோக்கிலான வாடகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி என்றும் குடியிருப்பு பகுதியை வர்த்தக நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சொந்த பயன்பாட்டிற்காக பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி […]
Continue reading …
சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் […]
Continue reading …
பிசிசிஐ வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் இந்திய வீரர்கள் விளையாட கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் வாங்கி உள்ளனர். குறிப்பாக ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் […]
Continue reading …
தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டி நடக்க உள்ளது. இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் சவுரவ் கங்குலி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியவர். கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது பிசிசிஐ தலைவராக கடந்த 3 ஆண்டுகள் செயல்படுகிறார். இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் மகாராஜாஸ் […]
Continue reading …
சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என்று அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதியன்று சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர இருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு […]
Continue reading …
விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் நிறுவனம் பால் வினியோகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆவின் பால் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலுக்கு மாறியுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் மட்டும் இன்னும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்து வருகிறது. இது […]
Continue reading …