Home » Posts tagged with » Netrikkan (Page 476)

மர்மமாக சுற்றிய சிறுவன்!

Comments Off on மர்மமாக சுற்றிய சிறுவன்!

மர்மமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீசார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், […]

Continue reading …

பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

Comments Off on பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25ம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் […]

Continue reading …

தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

Comments Off on தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார சட்டத் திருத்த […]

Continue reading …

புதிய நகைக்கடையில் கைவரிசை!

Comments Off on புதிய நகைக்கடையில் கைவரிசை!

கள்ளக்குறிச்சி அருகே புதிய நகைக்கடை திறந்து இரண்டே நாட்களில் திருடர்கள் கடையையே காலி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து […]

Continue reading …

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Comments Off on முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் ரயில் நிலையமருகே பேருந்து ஒன்று மோதியதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகளும் சேதமடைந்தது. வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் […]

Continue reading …

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Comments Off on 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 10ம் தேதி விருதுநகர் நெல்லை தென்காசி தேனி […]

Continue reading …

காமெடி நடிகருக்கு விருது!

Comments Off on காமெடி நடிகருக்கு விருது!

“ஜெர்ரி” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஸ். ஏ.எல்.விஜய்யின் “மதராசப்பட்டினம்,” “பைரவா” என பல படங்களில் நடித்துள்ளார். இவர் “நாய் சேகர்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ரசிகர்களிடம் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஹிரோவாக நடித்ததற்காக சதீஸுக்கு அறிமுக ஹீரோவுக்கான விருதை ஒரு தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விருதுடன் நடிகர் சதீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாய் சேகர்” பட இயக்குனருக்கும், இப்படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு […]

Continue reading …

அரசியல் பற்றி ஆளுனரிடம் ரஜினி பேச்சு!

Comments Off on அரசியல் பற்றி ஆளுனரிடம் ரஜினி பேச்சு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசியதாக கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்தாண்டு வரை அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், உடல் நலக்குறைவை அடுத்து, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் தன் ரசிகர்கள் விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளில் சேரலாம் எனவும் தெரிவித்தார். சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக டில்லி […]

Continue reading …

தேசிங்கு பெரியசாமி தகவல்!

Comments Off on தேசிங்கு பெரியசாமி தகவல்!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினி பாராட்டிய ஆடியோ வெளியான நிலையில், இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி […]

Continue reading …

மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

Comments Off on மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

மின்சார சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக உட்பட அரசியல் கட்சிகள் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று […]

Continue reading …