
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் 2ம் பாகத்தை பற்றிய தகவலை கூறியுள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் “தசாவதாரம்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்ததகவல் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கூகுள் குட்டப்பா.” இத்திரைப்படத்தில் தர்ஷன்,- லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. சென்னை திருப்போரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் “கூகுள் குட்டப்பா” பட […]
Continue reading …
சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனத்தின் இந்திய பிரிவை பிரபல தொழிலதிபர் அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனமான ஹோல்சிம் இந்திய பிரிவின் சிமெண்ட் நிறுவனங்களை தொழிலதிபர் அதானி வாங்குகிறார். இந்த நிறுவனங்களை அவர் 1050 கோடிக்கு வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டு சிமெண்ட் நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனத்தை அதானி வாங்கியவுடன் இந்தியாவின் உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய சிமெண்ட் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நூலின் விலை உயர்வின் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் கடிதம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர் கதையாகவே உள்ளது. இதனை தொடர்ந்து பல பொருட்களும் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பின்னலாடைகளுக்கான நூலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பின்னலாடைக்கான நூலின் விலையை குறைக்க கோரி பின்னலாடை […]
Continue reading …
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதியுடன் முடிவடைகிறது. நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 24ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 1ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படுகிறது. இந்த வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 3 ஆம் தேதிகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் […]
Continue reading …
தேர்தல் ஆணையம் மாநிலங்களவைக்கான எம்பி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மே 24-ம் தேதியிலிருந்து மே 31ம் தேதி வரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 3ம் தேதி கடைசி தேதி என்றும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Continue reading …
இலங்கை பிரதமராக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே இனி தினசரி 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வரப்போகும் இரண்டு மாதங்களுக்கு இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இலங்கையில் மின் தட்டுப்பாடு தினமும் 15 மணி நேரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் 75 மில்லியன் அமெரிக்க […]
Continue reading …
கடலில் வீடியோ எடுத்த நபர் அலையில் சிக்கி பலியான சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மானிலம் விழிஞ்சம் என்ற பகுதியில் புளிங்குடி ஆழிமலை சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடல் பகுதிக்குச் சென்றும் பாறைகளில் ஏறி நின்று செல்பி எடுப்பது வழக்கம். நேற்று மாலை புனலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ் (25). தனது நண்பர்கள் மற்றும் யாத்திரைக் குழுவுடன் ஆழிமலை கோவிலுக்குச் சென்றார். அவர் தன் நண்பர்களுடன் […]
Continue reading …
கென்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள “லெ மஸ்க்” திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இசைப்புயல் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. இதன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவிலிருந்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர்த்து சமீபத்தில் “99 சாங்ஸ்” போன்ற படங்களை தயாரித்தார். தற்போது முதன்முறையாக ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் இசை […]
Continue reading …
13 வயது சிறுவன் கைக்குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தை மாயமாகியுள்ளது. இந்த நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருக்கு ஒரு வயதில் ரீத்து என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைதான் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பள்ளியின் நீர் தொட்டியில் […]
Continue reading …
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது 3 […]
Continue reading …