Home » Posts tagged with » Netrikkan (Page 93)

விஜயபாஸ்கருக்கு நெருக்கடி..!

Comments Off on விஜயபாஸ்கருக்கு நெருக்கடி..!

அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து விவரங்களை தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் […]

Continue reading …

25ல் பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மி அறிவிப்பு!

Comments Off on 25ல் பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மி அறிவிப்பு!

நேற்று முன்தினம் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வருகிற 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் ஊழல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தனர். இம்முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என குற்றம் சாட்டிருந்தது. இவ்வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர். அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், “நேரில் […]

Continue reading …

தாம்பரம் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள்?

Comments Off on தாம்பரம் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள்?

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது. வங்கதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.ஐ ஜான் செல்வராஜ் என்பவர் 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார், அவரிடம் கட்டுக்கட்டாக இந்திய பணமும் வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சேலையூர் எஸ்.ஐ […]

Continue reading …

மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

Comments Off on மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மூட்டையில் கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப்பணம் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களை கொண்டு செல்லக்கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக வாகன சோதனையில் […]

Continue reading …

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

Comments Off on சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் […]

Continue reading …

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இன்று பழனி ரயில் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸ் மற்றும் பழனி நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு […]

Continue reading …

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி டில்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது […]

Continue reading …

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

Comments Off on கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue reading …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

Comments Off on சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 […]

Continue reading …