
கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபின் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் […]
Continue reading …
நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கௌசிக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட […]
Continue reading …
உலகத்தில் சமூக வலைதளம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என்ற மசோதாவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அமல்படுத்தி உள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த […]
Continue reading …
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இம்முறை கூட்டணி இல்லை என சிரோமனி அகாலி தளம் கட்சி அறிவித்துவிட்டது. பாஜகவும் தனித்து போட்டியிட உள்ளதாக […]
Continue reading …
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நாற்பது தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிவடைகிறது. சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. அவர் […]
Continue reading …
கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் “எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பாராளுமன்ற தொகுதி தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் களம் இறங்கியுள்ளார். அவரது பிரச்சாரத்தில், “நான் ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் இந்த பகுதி மாறவே இல்லை. வளர்ச்சி […]
Continue reading …
வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுவையை சேர்த்து 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அப்பகுதியில் […]
Continue reading …
பிவி ஷங்கர் இயக்கத்தில், ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார்- பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இவானா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. கிராமத்துக்கு அருகே இருக்கும் காடு ஒன்றில் யானை புகுந்து விட […]
Continue reading …
ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ரஷ்யாவில் நடந்த இசை கச்சேரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இத்தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை குழுவினர் நடத்திய இசை கச்சேரியில் திடீரென அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
Continue reading …
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதித்துள்ளதால், கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி 42 வயதான கேட் மிடில்டன் இளவரசி. கடந்த ஜனவரியில் கேட் மிடில்டனுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு கீமோதெரபி […]
Continue reading …