Home » Posts tagged with » Pondicherry (Page 2)

புதுவை முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on புதுவை முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

புதுசை முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியர்கள் தற்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊழியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் இனி அவர்கள் 15000 என ஊதியம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணி துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு தங்களது நன்றியை […]

Continue reading …

பரோட்டா சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on பரோட்டா சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு!

பரோட்டா சாப்பிட்டு இரவு தூங்கிய இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்களில் விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். சில கடைகளில் சுகாதாரமின்றி சமைப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி (33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் […]

Continue reading …

புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம்!

Comments Off on புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம்!

விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் […]

Continue reading …

புதுவையில் நாளை 144 தடை!

Comments Off on புதுவையில் நாளை 144 தடை!

நாளை முதல் 144 அமலில் இருக்கும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை […]

Continue reading …

பெண்களுக்கான பெட்ரோல் பங்க்!

Comments Off on பெண்களுக்கான பெட்ரோல் பங்க்!

புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பெண்களுக்கான தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை துவக்கி வைத்துள்ளார். பெட்ரோல் போடுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்பதால் பெண்கள் அதிருப்தியடைவார்கள். பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் […]

Continue reading …

புதுச்சேரியில் முழு அடைப்பு; வாகனங்கள் மீது கல்வீச்சு!

Comments Off on புதுச்சேரியில் முழு அடைப்பு; வாகனங்கள் மீது கல்வீச்சு!

அதிமுக சார்பில் புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]

Continue reading …

முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

Comments Off on முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என ஆவேசமாக கூறியுள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது. மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும். கோவில்கள், […]

Continue reading …

தீயணைப்பு துறையில் முதன்முறை பெண்கள்!

Comments Off on தீயணைப்பு துறையில் முதன்முறை பெண்கள்!

முதலமைச்சர் ரெங்கசாமி முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையிலும் தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். முதல் முறையாக புதுவை முதல்வர் ரங்கசாமி தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் தற்போது தீயணைப்புத் துறையில் 75 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் மனநிலையில் இதில் பெண்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை […]

Continue reading …

மின்துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

Comments Off on மின்துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

புதுவை அரசு மின்சாரத்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் மின்சாரத் துறை தனியார் மயமாக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார துறை ஊழியர்கள் இன்று முதல் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மின்சார துறை தனியார்மயம் ஆக்கப்படும் என […]

Continue reading …

டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

Comments Off on டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் படங்களை ஓ.டி.டியில் வெளியிட்டு வருகின்றனர். இதில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறப்பதற்கும் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைக் கொண்டு இன்றிலிருந்து டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு சமூக இடைவெளி, உடல் வெப்ப […]

Continue reading …
Page 2 of 3123