முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

Filed under: தமிழகம் |

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என ஆவேசமாக கூறியுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது. மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும். கோவில்கள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகே இருக்கும் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும். நீதிமன்றம் சென்றாவது மதுபான கடைகளை புதிதாக திறப்பதை தடுத்து நிறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.